கிராம உதவியாளர் பணிக்கான வினாத்தாள் வலைத்தளத்தில் ‘லீக்’: மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு
2022-12-05@ 00:07:13

மதுரை: கிராம உதவியாளர் பணியிடத்திற்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால், மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத 13,958 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 11,265 பேர் எழுதினர். இவர்கள், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக இருப்பதால், தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இதற்காக கேள்வியை கொடுத்து, பதில் எழுதும் முறையில் தேர்வு இல்லை. இதற்குப்பதிலாக தமிழில் ஒரு பாராவும், அதேபோல், ஆங்கிலத்தில் ஒரு பாராவும் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட பாராவில் உள்ள எழுத்துகளை பார்த்து விடைத்தாளில் அப்படியே, பிழையின்றி எழுத வேண்டும். முதல் அரைமணி நேரம் தமிழ் மொழிக்கான எழுத்து திறனறித்தேர்வும், அடுத்த அரைமணி நேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறித்தேர்வும் நடைபெற்றது. ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், பெண்களும் எழுதினர்.
ஒவ்வொரு தாலுகாவிலும், ஒவ்வொரு விதமான தலைப்பில், பாரா கொடுக்கப்பட்டது. இதில், மதுரை தெற்கு தாலுகாவில் கொடுக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான பாரா நேற்று முன்தினம் இரவு வெளியானதாகவும், இந்த கேள்வித்தாள் தன்னிடம் உள்ளது என்றும், ரூ.10 ஆயிரம் கொடுத்தால், பிரதி தருவதாகவும் ஒருவர் வீடியோவில் பேசி, சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனைக் கண்ட மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் கல்யாணசுந்தரம், உடனே ஆங்கிலத்திற்கான கேள்வித்தாளை மாற்றி, இரவோடு இரவாக தயாரித்து, நேற்று புதிய வினாத்தாள் மூலம் தேர்வு நடந்தது.
இதுதொடர்பாக மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், ‘‘வினாத்தாள் வெளியானது தொடர்பாக போலீசில் தாசில்தார் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குமரி மீனவர் படுகாயம்
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு
திண்டிவனம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தல்; முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!