போருக்கு தயார் இந்தியாவை சீண்டும் பாக். ராணுவ புதிய தளபதி
2022-12-05@ 00:02:51

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த போரையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அந்நாட்டின் ராணுவ தளபதியாக புதிதாக பதவியேற்ற ைசயத் ஆசிம் முனீர் கூறினார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக சையத் ஆசிம் முனீர் அண்மையில் பதவி ஏற்றார்.
அவர் பாகிஸ்தான் நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா தரப்பில் சிலர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறது. எங்களது தாய் நாட்டை காக்கவும், எதிரியை எதிர்த்து போரிடவும் தயாராக இருக்கிறோம். போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ளவும் தயார். இவ்வாறு சையத் ஆசிம் முனீர் கூறினார்.
இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி இந்திய வெளியுறவுத் துறை உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்க வில்லை.
மேலும் செய்திகள்
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 440 பேர் படுகாயம்
ஆப்கான் மாணவியர் நுழைவு தேர்வு எழுத தடை: தலிபான் அரசு திடீர் உத்தரவு
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!