‘ஒத்தைக்கு ஒத்தை வா’ போலீசாருடன் பா.ஜ. நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்
2022-12-04@ 16:39:35

திருப்பூர்: காங்கயம் அரசு மருத்துவமனையில் போலீசாருக்கும் பா.ஜ. நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாத வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்யகம் அருகே தாராபுரம்-காங்கயம் வந்த அரசு பஸ்சில் போலீசாருக்கும் பா.ஜ. நிர்வாகிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று புகார் கொடுக்க சென்றுள்ளனர். இத்தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று இரு தரப்பிலும் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், பா.ஜ., மாவட்ட செயலாளர் ராஜ் என்பவர் பணியில் இருந்த ரமேஷ் என்ற போலீசை ஒருமையில் பேசியதுடன், சட்டையை கழட்டி வைத்து விட்டு வா ஒத்தைக்கு ஒத்தை பாக்கலாம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பா.ஜ. மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட சில நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்பு இரு தரப்பினரையும் போலீஸ் உயரதிகாரிகள் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை
பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு
அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை: பாலகிருஷ்ணன்
2வது நாளில் 10 பேர் வேட்பு மனு காங்கிரஸ், இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்
எடப்பாடி கேட்டால் கையெழுத்து பாஜவுடன் முறையான அறிவிப்பு: ஓபிஎஸ் புது குழப்பம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!