23 பொதுத்துறை நிறுவனங்களை மூடிய பிரதமர் நரேந்திர மோடி: முத்தரசன் தாக்கு
2022-12-04@ 16:36:14

நெல்லை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் அளித்த பேட்டி:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசை நடத்தும் தமிழக கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 29ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஏஐடியுசி
தொழிற்சங்கம் பங்கேற்கும். தமிழக கவர்னர், பலரை சாகடிக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்திற்கு அனுமதி தர மறுத்து இழுத்தடிக்கிறார்.
இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். ஆனால் தற்போதைய மோடி அரசு கடந்த 9 ஆண்டு ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தைகூட உருவாக்கவில்லை. மாறாக 23 பொதுத்துறை நிறுவனங்களை மூடி தொழிலாளர் விரோத செயலில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டித்தும், தமிழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தியும், மோடியின் தொழிலாளர் விரோத சட்டங்களில் ஒன்றைகூட தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் ஜனவரி 24ம் தேதி ஏஐடியுசி சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் 1 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை
பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு
அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை: பாலகிருஷ்ணன்
2வது நாளில் 10 பேர் வேட்பு மனு காங்கிரஸ், இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்
எடப்பாடி கேட்டால் கையெழுத்து பாஜவுடன் முறையான அறிவிப்பு: ஓபிஎஸ் புது குழப்பம்
உடுக்கை அடித்து ஓட்டு சேகரிக்கும் குடுகுடுப்பை கோவிந்தன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!