தாயை நன்றாக கவனித்துக் கொண்டதால் இளைஞரை கரம்பிடித்த ரிங்கி - பிங்கி: மகாராஷ்டிரா போலீஸ் வழக்கு
2022-12-04@ 16:32:29

சோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் அக்லூஜின் மல்சிராஸ் தாலுகாவைச் சேர்ந்த சிறுதொழில் தொழிலதிபர் அதுல் என்ற இளைஞருக்கும், மும்பையை சேர்ந்த பட்டதாரி சாகோதரிகள் இருவரான ரிங்கி மற்றும் பிங்கி ஆகியோருக்கு, ஒரே மேடையில் திருமணம் நடந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் என்பவர் அக்லுஜ் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மணமகன் மற்றும் 2 மணமகள்களின் திருமணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஐபிசி பிரிவு 494ன் கீழ் அக்லுஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி ஆகியோரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அதுல் அவரை கவனித்துக் கொண்டார். அதனால், இவர்களது குடும்பத்தினருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அதுலை சகோதரிகள் இருவரும் காதலித்து வந்தனர். அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அதன்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமண சட்டங்களின்படி குற்றமாகும். இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
மேலும் செய்திகள்
மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்
வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது
அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு
அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்
காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!