காட்டு யானை தாக்கியதில் பெண் பலி
2022-12-04@ 02:05:56

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புளியம்பாறையை சேர்ந்தவர் கல்யாணி (55). இவர் கணவரை பிரிந்து தனியே வசித்து வந்தார். நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பெண்களுடன் வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை ஆவேசமாக ஓடி வந்தது. மற்ற 3 பெண்களும் சிதறி ஓட்டம் பிடித்தனர். கல்யாணி மட்டும் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை தும்பிக்கையால் சுழற்றி கீழே போட்டு காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி கல்யாணி பலியானார். தகவலறிந்து போலீசார், கல்யாணியின் உடலை மீட்டனர். ஏற்கனவே இதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்ற பெண்ணை அரிசி ராஜா என்ற யானை தாக்கி கொன்றது. நேற்று முன்தினம் அது புளியம்பாறை பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். கல்யாணியை தாக்கியது அரிசி ராஜா யானையா? என்று வனத்துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!