4வது ஹாக்கி டெஸ்டில் ஆஸி. வெற்றி: தொடரை இழந்தது இந்தியா
2022-12-04@ 01:31:42

அடிலெய்டு: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 5-4, 2வது ஆட்டத்தில் 7-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வென்று முன்னிலை பெற்றது. 3வது ஆட்டத்தில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸியை வீழ்த்தியது. ஆஸி 2-1 என முன்னிலை வகிக்க, 4வது ஆட்டத்தில் வென்றால் சமநிலை எட்டுவதுடன் தொடரை கைப்பற்றும் வாய்ப்பையும் தக்கவைக்கலாம் என்ற இலக்குடன் இந்தியா நேற்று களம் கண்டது. அதற்கேற்ப இந்தியாதான் முதல் கோல் அடித்தது. தில்பிரீத் சிங் 24வது நிமிடத்தில் அசத்தலாக கோலடித்தார். அதன் பிறகு நிலைமை தலைகீழானது. ஆஸி. வீரர்கள் தொடர்ந்து கோல் மழை பொழிய ஆரம்பித்தனர். அந்த அணியின் ஹேவர்டு ஜெர்மி 28, 40வது நிமிடங்களிலும், வீட்டன் ஜேக் 29, விக்ஹம் டாம் 33, டவுசன் மேட் 53வது நிமிடங்களிலும் கோல் அடித்து அசத்தினர். அதனால் ஆஸி. 5-1 என்ற கோல் கணக்கில் 3வது வெற்றியை பதிவு செய்ததுடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது.
Tags:
4th Hockey Test Auss. Win lose the series India 4வது ஹாக்கி டெஸ்டில் ஆஸி. வெற்றி தொடரை இழந்தது இந்தியாமேலும் செய்திகள்
மகளிர் உலக கோப்பை டி20; பயிற்சி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் பைனலில் சுரென்கோ
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் சவுராஷ்டிரா
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி
பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!