சமூகத்தில் சம அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்
2022-12-04@ 00:59:52

புதுடெல்லி; சமூகத்தில் சம அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: இந்திய மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் சுதந்திரமாக கண்ணியமான, வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும். அவர்கள் நல்ல கல்வியைப் பெறுவதையும், அவர்களின் வீடுகளிலும், சமூகத்திலும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களின் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சமமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்வதும் நமது கடமை.
இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தில் அறிவைப் பெறுவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் ஊனம் ஒரு தடையாக ஒருபோதும் கருதப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் தெய்வீக குணங்கள் கொண்டவர்களாக இருப்பதை பெரும்பாலும் காணலாம். நமது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்கள் அசாத்திய தைரியம், திறமை மற்றும் உறுதியின் வலிமையால் பல துறைகளில் சாதனைகளை படைத்ததற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. சரியான சூழலில் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால், அவர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது மட்டுமே அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
In society on equal footing differently abled work President Murmu சமூகத்தில் சம அளவில் மாற்றுத்திறனாளி வேலை ஜனாதிபதி முர்முமேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!