மேற்கு வங்கத்தில் வீட்டில் குண்டு வெடித்து 3 பேர் பலி: மம்தா மருமகன் பங்கேற்க இருந்த கூட்டத்தில் பதற்றம்
2022-12-04@ 00:58:23

கன்டாய்: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் பொது செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் மூன்று பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்திற்குட்பட்ட பூபதிநகர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மம்தாவின் மருமகனும், கட்சியின் பொது செயலாளர் மற்றும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்ற இருந்தார். இந்நிலையில் மேடை அமைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு அருகே இருந்த வீட்டில் இரவு 11.15மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஏதோ வெடித்து சிதறியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்து 3 சடலங்களை மீட்டனர். இதில் ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் அந்த பகுதியில் இருந்த பலர் காயமடைந்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
West Bengal house bomb blast 3 dead Mamata's son-in-law மேற்கு வங்க வீட்டில் குண்டு வெடித்து 3 பேர் பலி மம்தா மருமகன்மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!