பாக். டிரோனில் கடத்த முயன்ற 25 கிலோ ஹெராயின், வெடிமருந்து பறிமுதல்: ஒரே வாரத்தில் 3வது முறை
2022-12-04@ 00:57:24

சண்டிகர்: பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சுரிவாலா கிராமம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பிராந்தியத்திற்குள் டிரோன் வரும் சத்தத்தை கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உஷாரான வீரர்கள் டிரோன் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து டிரோன் திரும்ப சென்றுள்ளது. ஆனால் டிரோனில் இருந்து வீசப்பட்ட பொருட்களை எடுத்து செல்வதற்காக அந்த இடத்தில் அடையாளம் தெரியாத கும்பல் நடமாடியுள்ளது.
அவர்கள் மீதும் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சென்று வீரர்கள் சோதனை நடத்தியதில் 7.5கிலோ எடையுள்ள 9 ஹெராயின் பாக்கெட்டுக்கள், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் துணியில் சுற்றி வீசப்பட்டு இருந்த மேலும் 7 பாக்கெட் ஹெராயின்கள் கைப்பற்றப்பட்டது. இதில் 17.5கிலோ ஹெராயின் இருந்தது. ஒரே வாரத்தில் எல்லையில் 3வது முறையாக டிரோன் மூலமாக போதைப்பொருட்கள் வீசப்பட்டுள்ளது.
Tags:
Pak. 25 kg heroin explosives seized in drone attempt பாக். டிரோனில் கடத்த முயன்ற 25 கிலோ ஹெராயின் வெடிமருந்து பறிமுதல்மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!