தாய் புலியை தொடர்ந்து 4 குட்டிகளையும் கொன்றது ஆண் புலி
2022-12-04@ 00:54:46

சந்திராபூர்: மகாராஷ்டிரா வனப்பகுதியில் தாய் புலியைத் தொடர்ந்து 4 குட்டிகளையும் ஆண் புலி கொன்றது. மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் நேற்று 4 குட்டிப்புலிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காப்பகத்தின் தலைமை வன பாதுகாவலர் ஜிதேந்திரா ராம்கயோன்கர் கூறுகையில், ‘‘ஷிவ்னி வனப்பகுதியில் 4 குட்டிகள் இறந்து கிடந்தன. அவற்றில் 2 ஆண்கள், 2 பெண் குட்டிகள். அனைத்திற்கும் 3 முதல் 4 வயது இருக்கும். அதன் உடலில் புலியின் நக காயங்கள் உள்ளன’’ என்றார்.
இதே காப்பகத்தின் ஷியோனி வனப்பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 4 குட்டிகளின் தாய் புலி கொல்லப்பட்டு கிடந்தது. அதை ஆண் புலி அடித்துக் கொன்றிருக்கலாம் என வன அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 4 குட்டிகள் பிறந்ததில் இருந்து அவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஷிவ்னி வனப்பகுதியில் ஆண் புலி நடமாட்டம் தென்பட்ட நிலையில், 4 குட்டிகள் கொல்லப்பட்டிருப்பதால் இதற்கு ஆண் புலிதான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!