ஐகோர்ட் மதுரை கிளையில் டிச.5 முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம்
2022-12-03@ 15:42:04

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் டிச.5ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் 3 மாதத்திற்கு ஒரு முறை விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, வரும் 5ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றப்பட உள்ளனர். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பொது நல வழக்குகள், 2022ம் ஆண்டு முதலாக ரிட் அப்பீல் மனுக்கள், குற்றவியல் அவமதிப்பு மனுக்களை விசாரிப்பர்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வில், ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் அப்பீல் மனுக்கள், 2021ம் ஆண்டு வரையிலான ரிட் அப்பீல் மனுக்கள் விசாரிக்கப்படும்.
நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கனிமவளம், நில எடுப்பு, தியாகிகள் பென்சன் தொடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி எம்.தண்டபானி, தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ெதாடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, சுங்கம் மற்றும் கலால் வரி, மோட்டார் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வரி தொடர்பான மனுக்களை விசாரிப்பார்.
நீதிபதி ஆர்.தாரணி, 2020ம் ஆண்டு வரையிலான சிவில் துணை மனுக்கள் மற்றும் சிவில் துணை இரண்டாம் அப்பீல் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி பி.புகழேந்தி, 2017ம் ஆண்டு முதலான இரண்டாம் அப்பீல், சிவில் சீராய்வு மனுக்கள், கம்பெனி அப்பீல் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜி.இளங்கோவன், சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு தொடர்பான மனுக்களையும், நீதிபதி கே.முரளிசங்கர் போலீசாருக்கு உத்தரவிட ேகாரும் மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 2019ம் ஆண்டு வரையிலான தொழிலாளர் மற்றும் பணியாளர் தொடர்பான மனுக்களையும், நீதிபதி என்.மாலா, முதல் அப்பீல், 2021ம் ஆண்டு முதலான சிவில் துணை அப்பீல் மற்றும் சிவில் துணை இரண்டாம் அப்பீல் மனுக்களையும், நீதிபதி கே.குமரேஷ்பாபு, 2018ம் ஆண்டு வரையிலான கனிமவளம், நில எடுப்பு, தியாகிகள் பென்சன் உள்ளிட்ட மனுக்களை விசாரிப்பர்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!