மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பலி: போலீசார் தடயங்களை சேகரித்து காரணம் குறித்து விசாரணை
2022-12-03@ 15:12:01

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீடு மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு மெதினிப்பூர் உள்ள பூபதி நகரில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர் ராஜ்குமார் மன்னாவுக்கு சொந்தமான கூரைவீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கரவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பேனர்ஜி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி
ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!