ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ. 5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் திட்ட பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
2022-12-03@ 14:05:00

சென்னை: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு 161, ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ. 5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் திட்ட பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு 161 ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகர் 2வது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து ரூ.5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் திட்ட பணியை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா. மோ.அன்பரசன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்தப் பாலப் பணியானது 22.4 மீ. நீளத்திலும், இருபுறமும் 1.5 மீ அகலத்தில் நடைபாதையுடன் 11.5 மீ. அகலத்திலும் அமைக்கப்படுகிறது. இத்திட்டப்பணியானது உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜீவன் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மேடவாக்கம் பிரதான சாலையை அடைவதற்கு சுமார் இரண்டு கீ.மீ. தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இப்பாலம் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் போது இப்பகுதி மக்கள் மேடவாக்கம் பிரதான சாலையை சென்றடையலாம். இப்பணியானது இரண்டு வருட காலங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா, முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி, துணை ஆணையாளர்கள் எம். எஸ். பிரசாந்த், எம். பி. அமித், மண்டலகுழு தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர் எஸ். ரேணுகா, தலைமைப் பொறியாளர் (பாலங்கள்) எஸ். காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!