குப்பை வண்டிகளை இழுக்க ஆளில்லை; அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனங்கள்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
2022-12-03@ 12:31:36

திருவாடானை: ஊராட்சிகளில் குப்பை வண்டிகளை இழுக்க போதிய ஆட்கள் இல்லாததால் பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள பல கிராமங்களுக்கு தெருக்கள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை அகற்ற துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிக்கு போதிய எண்ணிக்கயைில் ஆட்கள் கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனால் பல ஊராட்சிகளிலும் பெண்கள் மற்றும் வயதானவர்களை பணியில் நியமித்துள்ளனர்.
இவர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி சார்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று சக்கர சைக்கிளில் கொட்டி அவற்றை இழுத்துச்சென்று 2 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள குப்பை சேகரிப்பு மையங்களில் சேர்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது. குடியிருப்பு பகுதிகள் அருகே குப்பைகளை கொட்டக்கூடாது. இதனால் குப்பை கொட்டும் இடத்திற்கு வண்டிகளை இழுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. பல ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வண்டிகளில் இழுத்துச் செல்ல முடியாத காரணத்தால், அந்தந்த பகுதிகளிலேயே கொட்டி தீவைத்து கொளுத்துகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் புகைமூட்டம் உருவாகி மாசு ஏற்படுகிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் குப்பைகள் கொட்டுவதற்கு பொது இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குப்பைகள் சேர்ந்ததும் லாரிகளில் எடுத்துச்செல்கின்றனர். மேலும் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதேபோல் பேரூராட்சிகளில் குப்பை சேகரிக்கும் பணியில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஆனால் கிராம ஊராட்சிகளுக்கு கை வண்டியில் மட்டுமே குப்பைகளை சேகரித்து நீண்ட தூரம் இழுத்துச்சென்று சேகரிப்பு இடங்களில் கொட்டும் நிலை தொடர்கிறது. இதற்கிடையே பல ஊராட்சிகளில் பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. அதுபோன்ற ஊராட்சிகளுக்கு மட்டும் குப்பைகளை அள்ளிச்செல்ல பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற கிராம ஊராட்சிகளில் கைவண்டிகளில் மட்டுமே குப்பைகளை அகற்ற வேண்டியுள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பேட்டரியால் செயல்படும் குப்பை வண்டிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து துப்புரவு தொழிலாளர் சங்க நிர்வாகியும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான நாகநாதன் கூறுகையில், \”நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய பணியாளர்களும், குப்பை அள்ள வாகனங்களும் போதுமான அளவில் உள்ளன. ஆனால் கிராம ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிக்கும் வண்டிகளை இழுக்க போதிய ஆட்கள் பணியில் இல்லை.
கிராம ஊராட்சிகளுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதால் டிராக்டர் உள்ளிட்ட குப்பை அள்ளு் வாகனங்களை வாங்க முடியவில்லை. ஆனால் பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டி வழங்கினால் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடும் தேவையில்லை. பராமரிப்பும் சுலபமானது. எனவே மாவட்டத்தில் ஊராட்சிகளில் குப்பை வண்டிகளை இழுக்க ஆட்கள் பற்றாக்குறை இருப்பதை ஏற்றுக்கொண்டு பேட்டரியால் இயங்கும் வண்டிகளை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\” என்றார்.
மேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!