மகளிருக்கான உரிமைத் தொகை வரும் ஆண்டில் வழங்கப்படும்: 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு..!
2022-12-03@ 10:21:59

சென்னை : வரும் ஆண்டில் மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டினை சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.
3 நாட்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவான நேற்று கரகாட்டம், தெருக்கூத்து என தமிழரின் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டின் வருவாய் பெருக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நல்ல இளைஞர்களை, மாணவர்களை உருவாக்குகிற ஆற்றல் தொடக்க கல்வி ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது என்றார். ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள்
சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!