டிரோனில் கடத்த முயன்ற 5 கிலோ ஹெராயின் பறிமுதல்
2022-12-03@ 00:46:10

சண்டிகர்: பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வயலில் சுமார் 5 கிலோ ஹெராயினுடன் டிரோன் ஒன்று கைப்பற்றப்பட்டது. பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் டிரோன் ஊடுருவல் முயற்சிகளை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் டிரோன்கள் சுட்டு வீழத்தப்பட்டுகின்றது. நேற்று தர்ன் தாரன் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்பகுதியில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. அதில், 5 கிலோ ஹெராயின் இணைக்கப்பட்டு கடத்த முயற்சி செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிரோன் மற்றும் ஹெராயின் போதை பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!