காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி: ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு
2022-12-03@ 00:45:30

அகர்மால்வா: காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி என்று ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அகர் மால்வா அடைந்தது. அப்போது மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியா ஒரு துரோகி. உண்மையான 24 காரட் துரோகி. கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு மூத்த தலைவர் கபில் சிபல் கட்சியை விமர்சனம் செய்யவில்லை. அவரைப் போன்றவர்கள் கட்சிக்கு திரும்ப வர அனுமதிக்கப்படலாம். ஆனால் சிந்தியா அல்லது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை அனுமதிக்க முடியாது. காங்கிரசை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.
Tags:
In Congress Jyotiraditya Scindia 24 Carat Betrayal Jairam Ramesh காங்கிரசில் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோக ஜெய்ராம் ரமேஷ்மேலும் செய்திகள்
தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!