9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
2022-12-02@ 15:59:05

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சுமதி (35, பெயர் மாற்றம்) செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், 9ம் வகுப்பு படித்து வரும் எனது மகளை 2 நாட்களாக காணவில்லை. கடந்த 29ம் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது காணவில்லை.
அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது எந்த தகவலும் இல்லை. 4 மாதத்திற்கு முன்பு இதேபோன்று வியாசர்பாடி பி கல்யாணபுரம் 3வது தெருவை சேர்ந்த இன்பா (எ) இன்பரசன் (22) என்பவருடன் சென்றார். இதையறிந்த நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வீட்டுக்கு வந்தார்.
இம்முறை வரவில்லை’ என்று கூறியிருந்தார். இதையடுத்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிவு செய்து விசாரித்தார். ஆந்திராவில் இன்பரசனுடன் சுமதி இருப்பது தெரிந்தது. இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். திருமண ஆசைக்காட்டி அழைத்து சென்றதும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் இன்பரசன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!