ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நடமாடிய ஐயப்ப பக்தர்கள்: செல்பி, குரூப் போட்டோ எடுத்ததால் பரபரப்பு
2022-12-02@ 12:23:15

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தின் மேல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் நடமாடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பிரகார மேற்பகுதியில் கோயில் ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் மட்டுமே செல்ல முடியும். மேற்பகுதிக்கு செல்வதற்கென்று பிரத்யேக வழிகள் உள்ளன. இந்த வழிகள் எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். இதனால் குறிப்பிட்ட பணியாளர்கள் தவிர வேறு எவரும் செல்ல முடியாது.
நேற்று காலை ராமநாத சுவாமி மூன்றாம் பிரகாரத்தின் மேல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் பலர் நடமாடியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். தீர்த்தமாடி திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பலர் தெற்கு கோபுர வாசல் அருகில் உள்ள நந்தவனம் பகுதியில் இருக்கும் படிகள் வழியாக ஏறி, மூன்றாம் பிரகாரம் மேல் தட்டோடு பகுதிக்கு சென்று ஈரத்துணிகளை காயப் போட்டுள்ளனர்.
மேலும் தட்டோடு பகுதியில் அங்குமிங்கும் நடந்து திரிந்ததுடன் மொபைலில் செல்பி எடுப்பது, குரூப் போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் எப்படி இவர்கள் சென்றார்கள் என விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் செய்திகள்
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்பு: கடலோர காவல் படை நடவடிக்கை
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!