ராணிப்பேட்டை உழவர் சந்தையில் ரூ.5 லட்சம் மதிப்பில் சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன அறை : 5 டன் வரை காய்கறிகளை இருப்பு வைக்கலாம்
2022-12-02@ 12:14:15

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் உள்ள உழவர் சந்தையில் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் குளிர்பதன அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 டன் வரை காய்கறிகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம். ராணிப்பேட்டை உழவர் சந்தைக்கு வாலாஜா, சோளிங்கர், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். பசுமையான காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஏராளமான பொதுமக்கள் ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், உழவர் சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய குளிர்பதன அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முருகன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளை தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ராணிப்பேட்டை உழவர் சந்தையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் குளிர்பதன அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறை சூரிய ஒளியில் மூலம் குளிரூட்டப்படும். மேலும், 5 டன் வரை காய்கறிகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம். சுய உதவிக்குழு மூலமாக இந்த அறை பராமரிக்கப்படும். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் காய்கறிகளை இந்த குளிர்பதன அறையில் வைத்துக்கொள்ளலாம். இதற்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். இந்த குளிர்பதன அறை விரைவில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், என்றார்.
மேலும் செய்திகள்
சென்னையில் பிப். 11ம் தேதி பிப்ரவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிப்பு
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் இலங்கை பயணம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!