சேலத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு வந்த 3 லட்சம் பார்வையாளர்கள்: இதுவரை ரூ.2.60 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
2022-12-02@ 11:46:58

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு இதுவரை 3லட்சம் பேர் வந்து பார்வையிட்டுள்ளனர். ரூ.2.60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.
சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி திடலில் மாபெரும் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடக்கும், இப்புத்தக திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தோடு (30ம் தேதி) முடிவடைய இருந்த இப்புத்தகத் திருவிழாவை, புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரும் 4ம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது.
சேலம் புத்தகத்திருவிழாவை இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்துள்ளனர். ரூ.2.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் மட்டும் ரூ.2 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. புத்தகத்திருவிழாவிற்கு வரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும், பொதுமக்களை கவரும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகப்படியான மக்கள் வருவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!