சின்னமனூர் சந்தையில் மூட்டை மூட்டையாக காய்கறிகள் தேக்கம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
2022-12-02@ 11:44:44

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் பல்வேறு காய்கறிகளை விளைவிக்கின்றனர். இந்த காய்கறிகளுக்காக சின்னமனூர் பகுதியில் ஏலச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் விவசாயிகள் வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய், பச்சைமிளகாய், முருங்கக்காய், சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மொத்தமாக கொண்டுவந்து இந்த ஏல சந்தையில் சேர்க்கின்றனர்.
இந்த காய்கறிகளை கேரள, தமிழ்நாடு வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை இப்பகுதியில் விட்டுவிட்டு பெய்து வருவதால், தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்து, ஏல சந்தைக்கு சுமார் 220 டன் காய்கறிகள் வருகிறது.
இந்த காய்கறிகளை மழையின் காரணமாக வாங்கி செல்வதில் தமிழக, கேரள வியாபாரிகளிடையே மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏலச் சந்தையில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக அதிக விலைக்கு விற்ற காய்கறிகள், தற்போது விலை குறைய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!