மழைப்பொழிவு, பனிபொழிவின் காரணமாக கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு
2022-12-02@ 10:22:10

சென்னை: சென்னை கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ, கனகாம்பரம் போன்ற பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மட்டும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுவது வழக்கம். அதேபோல் மழை மற்றும் பனி காலங்களில் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாகவும் பனிபொழிவின் காரணமாகவும் பூக்களின் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் முல்லை, செவ்வந்தி, சம்பங்கி, அரும்பு, மல்லி உள்ளிட்ட பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் நாள்தோறும் 25 முதல் 30 டன்கள் அரை பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் மல்லிகைப் பூ கிலோ ரூ.700லிருந்து ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. கனகாம்பரம் ரூ.600க்கும், முல்லை ரூ.700க்கும் விறபனையாகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் பூக்களின் விலை இந்த வாரம் சற்று உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் இலங்கை பயணம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!