கிரிவலப்பாதையில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு: கார்த்தீகை தீபத்தன்று பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸ்
2022-12-02@ 09:59:26

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணமலையார் கோயிலில் கார்த்தீகை தீபத்திருவிழா அன்று போலீ பாஸ் மூலம் நுழைபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை என தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணமலையார் கோயிலில் கார்த்தீகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சியாக நடைபெற்று வருகிறது.
வரும் 6-ம் தேதி மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் கிரிவலம் பாதையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் மகாதீபம் ஏற்றப்படும் நாளில் கோயிலுக்கு 30 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறினார்.
நடப்பு ஆண்டில் பக்தர்களுக்கு பார் கோடுடன் கூடிய பாஸ் வழங்கபடும் எனக்கூறிய டிஜிபி சைலேந்திர பாபு உரிய அனுமதி இன்றி நுழைபவர்களுக்கு கடும் நடவடிக்கை பாயும் என்றார். கார்த்தீகை தீபத்தினத்தன்று ஐ.ஜி கண்ணன் தலைமையில் 4 டிஐஜி, 27 காவல் கண்காணிப்பாளர்கள் என 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை நகரப்பகுதியில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்பு: கடலோர காவல் படை நடவடிக்கை
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!