விமான நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம்
2022-12-02@ 01:01:24

புதுடெல்லி: டெல்லி உட்பட 3 விமான நிலையத்தில் பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. விமான நிலையங்களில் நுழையும் போது பயணிகளின் அடையாளத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அடையாள அட்டை மற்றும் விமான டிக்கெட்டை காண்பித்த பின்னர்தான் பயணிகள் உள்ளே நுழைய முடியும். இந்நிலையில், பயணிகளின் முகத்தை அடையாளம் கண்டு அவர்களை உள்ளே அனுமதிக்கும் டிஜி யாத்ரா என்ற மின்னணு முறையை டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் நேற்று மத்திய அரசு துவங்கியது. இதன்படி, டிஜி யாத்ரா ஆப்பை செல்போனில் பதிவிறக்கம் செய்தவர்கள், தங்கள் போர்டிங் பாசை விமான நிலைய வாயிலில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
அதன் பிறகு, அங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன கேமரா உதவியுடன் அவரது முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் கணினி உறுதி செய்யும். அதை தொடர்ந்து அந்த பயணி விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார். பாதுகாப்பு சோதனை விமானம் ஏறும் நுைழவு வாயில் பகுதி யிலும் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த டிஜி யாத்ரா திட்டம் ஐதராபாத், கொல்கத்தா , புனே மற்றும் விஜயவாடா ஆகிய விமான நிலையங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மக்கள் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் மோடி எப்படி கூறுகிறார்?.. இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?: மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா விளாசல்..!!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி; உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு..!!
ஆள் குறைப்பு நடவடிக்கையால் பேஸ்புக் பதிவிடுவதில் சிக்கல்: 12 ஆயிரம் பேர் புகார்
பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனம் கலப்பு: நிறுவனத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 12ம் தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைப்பு: சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!