நீதித்துறையை சேர்ந்த விஐபி இளம்பெண்ணுடன் உல்லாசம்; நள்ளிரவில் வழக்கை விசாரித்த நீதிபதி
2022-12-02@ 01:01:20

புதுடெல்லி: நீதித்துறையை சேர்ந்த முக்கிய விஐபி ஒருவர், இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட, டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெல்லியில் நீதித்துறையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது. நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு முதலில் இந்த வீடியோ அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு சில முக்கிய சமூக வலைதள ஊடகங்களிலும் இந்த வீடியோ வெளியானது. இதை எதிர்த்தும், இந்த வீடியோவை வெளியிட தடை விதிக்கும்படியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர், அவசர வழக்கை தாக்கல் செய்தார். இந்த வீடியோ மேலும் பரவினால், தனக்கு அனைத்து வகையிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என மனுவில் அவர் தெரிவித்தார்.
இதை உடனடியாக விசாரிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவே இந்த வழக்கை தை விசாரித்த நீதிபதி வர்மா, இந்த வீடியோ வெளியிடக் கூடாது என அனைத்து சமூக வலைதள ஊடகங்களுக்கும் தடை விதித்தார். மேலும், வெளியான வீடியோவில் உள்ள உருவத்தை மறைக்கும்படியும் உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கும், வீடியோ வெளியான முக்கியமான 4 சமூக வலைதள ஊடகங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகள்
மக்கள் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் மோடி எப்படி கூறுகிறார்?.. இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?: மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா விளாசல்..!!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி; உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு..!!
ஆள் குறைப்பு நடவடிக்கையால் பேஸ்புக் பதிவிடுவதில் சிக்கல்: 12 ஆயிரம் பேர் புகார்
பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனம் கலப்பு: நிறுவனத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 12ம் தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைப்பு: சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!