முதல் நாளே 506/4ரன்; இங்கிலாந்து புதிய சாதனை
2022-12-02@ 01:00:46

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில், முதல் நாளே அதிக ரன் குவித்து 112 ஆண்டு வரலாற்று சாதனையை நொறுக்கி, இங்கிலாந்து புதிய சாதனையை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நேற்று முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. அசத்தலாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரெவ்லி, பென் டக்கெட் ஆகியோர் சதம் விளாசியதுடன் முதல் விக்கெட்டுக்கு 233 ரன் குவித்தனர். ஜாக் 122ரன், பென் 107 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜோரூட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இணை சேர்ந்த ஒல்லி போப், ஹாரி புரூக் இணை 4வது விக்கெட்டுக்கு 176 ரன் சேர்த்தது. சதம் விளாசிய போப் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். கூடவே புரூக்கும் சதம் அடித்தார். முதல் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 75ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 506ரன் குவித்தது. புரூக் 101*, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 34* ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்கின்றனர். பாக் தரப்பில் ஜாகித் முகமது 2 விக்கெட் வீழத்தினார்.
புதிய சாதனை: டெஸ்ட் போட்டி வரலாறில் முதல் நாளே அதிக ரன் குவித்த அணி என்ற புதிய சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 494ரன் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து. டெஸ் போட்டியில் ஒரு அணி 2 இன்னிங்சில் 5 வீரர்கள் சதம் விளாசியதே சாதனையாக உள்ளது. ஒரு இன்னிங்சில் 4 வீரர்கள் சதம் விளாசிய சாதனையை ஏற்கனவே இங்கிலாந்து(1938) படைத்துள்ளது. அதில் ஒன்று இரட்டைச் சதம். ஒருவேளை இன்று ஸ்டோக்சும் சதம் விளாசினால் இங்கிலாந்து மீண்டும் புதிய சாதனை படைக்கலாம்.
மேலும் செய்திகள்
உலக கோப்பை ஹாக்கி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
நியூசிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி தருமா இந்தியா?
யு-19 மகளிர் டி20 உலககோப்பை பைனல் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் முறையாக சபலென்கா சாம்பியன்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!