மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிய யானையை அரசு வாங்காது: முதல்வர் ரங்கசாமி பேட்டி
2022-12-02@ 00:28:17

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு புதிய யானையை அரசு வாங்காது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி பக்தர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி நேற்று முன்தினம் காலை நடைபயணம் மேற்கொண்டபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியபின், உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகரின் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் லட்சுமி யானை இருந்து வந்தது. அதன் மறைவுக்கு பிறகு கோயிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மணக்குள விநாயர் கோயிலுக்கு புதிய யானையை அரசு வாங்காது என முதல்வர் ரங்கசாமி நேற்று நடந்த விழாவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags:
Manakula Vinayagar temple new elephant government will not buy Chief Minister Rangasamy மணக்குள விநாயகர் கோயில் புதிய யானை அரசு வாங்காது முதல்வர் ரங்கசாமிமேலும் செய்திகள்
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்பு: கடலோர காவல் படை நடவடிக்கை
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்