நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி
2022-12-02@ 00:28:01

ராசிபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் கூறுகையில், பெரு முதலாளிகளுக்கும், அம்பானி மற்றும் அதானிக்கும் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிறார்கள். கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. பாஜவினர் கவர்னரை பார்த்து, தமிழக அரசு மீது புகார் தெரிவித்து மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு பிரதமர் வந்தபோது, பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக தெரிவித்து, தமிழக அரசு மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்.
ஆன்லைன் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் விட்டதால், காலாவதியாகி விட்டது. தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கேள்விக்குறியாகி உள்ளது. கவர்னருக்குண்டான வேலையை விட்டு விட்டு, அவர் மற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். எனவே, கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜ அல்லது ஆர்எஸ்எஸ் பணி செய்ய சென்று விடலாம். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Parliamentary elections alliance with DMK Tamil Nadu Governor resignation Balakrishnan interview நாடாளுமன்ற தேர்தல் திமுகவுடன் கூட்டணி தமிழக ஆளுநர் ராஜினாமா பாலகிருஷ்ணன் பேட்டிமேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை
தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!