ரியல் எஸ்டேட்காரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் கைது
2022-12-02@ 00:27:57

திருச்சி:திருச்சி காட்டூர் பாப்பாகுறிச்சியை சேர்ந்தவர் அசோக்குமார்(44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், திருவெறும்பூர் அருகே பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்தார். அதற்கு சந்தை மதிப்பாக ரூ. 1 லட்சம் நிர்ணயம் செய்து பத்திர பதிவு செய்ய திருவெறும்பூர் சார்பதிவாளர் பாஸ்கரனை(56) அணுகியுள்ளார். அப்போது அவர், அந்த நிலத்தை விவசாய நிலமாக 47 (A) படி பத்திரம் பதிவு செய்ய தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி அசோக்குமார் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையின் பேரில் சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.1 லட்சத்தை நேற்று அசோக்குமார் லஞ்சமாக கொடுத்தார் அப்போது மறைத்திருந்த போலீசார் சார்பதிவாளர் பாஸ்கரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
Tags:
Real Estate Rs. 1 lakh bribe sub-registrar arrested ரியல் எஸ்டேட் ரூ. 1 லட்சம் லஞ்சம் சார்-பதிவாளர் கைதுமேலும் செய்திகள்
விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்து கொலை கணவனுக்கு ஆயுள் சிறை
கத்திமுனையில் மிரட்டி ஓட்டல் ஊழியரிடம் வழிப்பறி
நகை திருடிய வேலைக்கார பெண் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!