ஊட்டி எடக்காடு-கன்னேரி சாலையில் 1 கி.மீ. நடந்து சென்ற சிறுத்தை: சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்
2022-12-01@ 21:07:45

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள எடக்காடு-கன்னேரி சாலையில் ஹாயாக நடந்துச் செல்லும் சிறுத்தையின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் மற்றும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், தற்போது அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டுகின்றன. எனவே, இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள கன்னேரி பகுதியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் ஒரு சிறுத்தை வெகுதூரம் நடந்து சென்றுள்ளது. இதை அவ்வழியாக வந்த மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சிறுத்தை வாகனங்களின் முன் எவ்வித அச்சமும் இன்றி ஹாயாக நடந்து செல்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகள்
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி
தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்
புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை
தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!