பிரேசிலில் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவில் சிக்கிய 50 பேரின் கதி என்ன?
2022-12-01@ 20:52:28

பரானா: பிரேசிலில் கனமழை பெய்து வருவதால் பரானா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் நாட்டின் தெற்கு மாநிலமான பரானாவில் கனமழை பெய்து வருவதால் பிஆர்-376 என்ற நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் காணவில்லை. நெடுஞ்சாலையின் குறுக்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின. ஆறு டிரெய்லர் லாரிகள் மற்றும் 15 வாகனங்கள் மண்ணில் புதைந்துள்ளன.
அதனால் இந்த விபத்தில் சிக்கிய 50 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. தகவலறிந்த ராணுவம், தீயணைப்புப் படையினர், சிவில் பாதுகாப்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவால் பாரனா பகுதியில் 680 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது
நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!