நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!!
2022-12-01@ 09:00:20

அகமதாபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின்
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, ஆம்-ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் வரும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத், கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பாஜக, காங்கிரஸ் 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி போட்டியிடும் கம்பாலியா தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா போட்டியிடும் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர். மேலும் 14,382 வாக்குசாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை
தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!