பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.25 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்
2022-12-01@ 01:44:37

பல்லாவரம்: பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.25 கிலோ கஞ்சா மற்றும் 2 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே ஒரு கும்பல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தாம்பரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ஷாலினி மற்றும் சப்இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையில் விரைந்து சென்ற போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அப்போது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியை சேர்ந்த கோலப்பள்ளி, சோம்பல் சின்னி (24) மற்றும் விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 2.25 கிலோ கஞ்சா இருந்தது.
இருவரும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, சிறு சிறு பொட்டலங்களில் அடைத்து பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகள் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கும்பகோணத்தில் தொடர்செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஊட்டி நகரில் இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை
அழகியை பழக வைத்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 4 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!