மனவளர்ச்சி குன்றிய மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 107 வருடம் சிறை
2022-11-29@ 00:45:41

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கும்பழா என்ற பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உண்டு. சிறிது மனவளர்ச்சி குன்றிய இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன் கணவனை விவாகரத்து செய்து விட்டு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் அந்த சிறுமி வகுப்பறையில் வைத்து அழுவதை கவனித்த ஆசிரியை, அவரிடம் விவரத்தை கேட்டுள்ளார்.
அப்போது தனது தந்தை டிரில்லிங் எந்திரத்தால் குத்தி சித்திரவதை செய்து பலாத்காரம் செய்வதாக அந்த மாணவி கூறியுள்ளார். இது குறித்து பள்ளி ஆசிரியை பத்தனம்திட்டா போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் ஜான், சிறுமியின் தந்தைக்கு 107 வருடம் சிறைத் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!