நெமிலி சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
2022-11-28@ 19:42:30

நெமிலி: தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இன்று அதிகாலை முதல் நெமிலி, பனப்பாக்கம், பள்ளூர் சேந்தமங்கலம், தக்கோலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடும்பனி கொட்டியது.
எதிரே இருக்கும் பொருட்களை கூட கண்டறியமுடியாத வகையில் கடும் பனிமூட்டமாக காணப்பட்டது. மழை பெய்வதுபோல் காணப்பட்ட பனிமூட்டத்தால் தெருக்கள், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை சீராக இயக்க முடியவில்லை. அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றது. காலை சுமார் 8 மணி வரை ஏற்பட்ட பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!