பழநி அருகே பரபரப்பு; சாயப்பட்டறையில் பயங்கர தீ: ரூ5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
2022-11-28@ 19:40:31

பழநி: பழநி அருகே இன்று காலை சாயப்பட்டறையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாமிநாதபுரம் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் மற்றும் காகித ஆலைகள், எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சாயப்பட்டறையில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று பணியில் ஈடுபட்டனர்.காலை 7.30 மணியளவில் இந்த சாயப்பட்டறையில் இருந்த ஆயில் கேன்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. பணியில் இருந்த ஊழியர்கள் அணைக்க முயன்றனர்.
அணைக்க முடியாததால் தீ மளமளவென அருகிலிருந்த பாய்லருக்கு பரவியது. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியேறினர். தீ பற்றி எரிந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழநி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 3 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சாயப்பட்டறையில் இருந்த பாய்லர், இயந்திரங்கள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
கடமலைக்குண்டு அருகே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!