வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகு சவாரி செய்து மகிழ்ச்சி
2022-11-28@ 19:38:10

கொடைக்கானல்: வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இரண்டு தினங்களாக இரவில் நடுங்க வைக்கும் கடுமையான குளிரும், பகலில் இதமான குளிர் சூழலும் நிலவுகிறது. இந்த ரம்மியமான சூழலை அனுபவித்து ரசிக்க வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தன. மேலும் இரண்டு தினங்களுக்கு முன் கப்பிள்ஸ் சீசன் தொடங்கிய நிலையில் வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதேபோல் அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருவதால், அதனை கொண்டாடவும், வெளிநாட்டு பயணிகளின் வருகையும் துவங்கியுள்ளது. கொடைக்கானலில் குளிர் வாட்டி வருகிறது. இனி வருங்காலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!