காங்கிரசில் இணைந்த குஜராத் முன்னாள் அமைச்சர்: சித்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!
2022-11-28@ 18:12:53

சூரத்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் அம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதேவேளை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர்.
அந்த வகையில் குஜராத் மாநில பாஜவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெய் நாராயண் வியாஸ் கடந்த 5ம் தேதி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதான் மாவட்டம் சித்பூர் தொகுதியை சேர்ந்த இவர், பதான் மாவட்டத்தை கட்சியில் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், எந்த தொகுதி பிரச்னையையும் கட்சி மேலிடம் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில், பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் சித்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!