ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் பதவி விலக வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு..!!
2022-11-28@ 18:06:07

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அந்த மசோதா காலாவதியாகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 32 பேர் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியது. ஆளுநர் ஒப்புதலுடன் இயற்றப்பட்ட அவசர சட்டத்தை நிரந்தரமாகும் சட்ட மசோதா, கடந்த அக்டோபர் 19ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக 28ம் தேதி அனுப்பப்பட்டது.
மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அடுத்த நாளே அரசு விளக்கம் அளித்தும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின் பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்கள் முடிந்ததால், அரசியல் அமைப்பு சட்டம் 213வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் இனி பறிபோகும் உயிர்களுக்கு யார் பொறுப்பேற்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் தனது பணியை சரிவர செய்யாததால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர் போயுள்ளதாக கூறியுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அதற்கு பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!