கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம்: திருவனந்தபுரம் காவல் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 36 போலீசார் காயம்
2022-11-28@ 10:47:02

திருவனந்தபுரம்: கேரளாவில் விழிஞ்சம் துறைமுக போராட்டத்தில் கைதானவர்கள் விடுவிக்க கோரி திருவனந்தபுரம் காவல் நிலையம் மீது மீனவர்கள் நடத்திய தாக்குதலில் 36 போலீசார் காயமடைந்தனர். திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வர கூடிய விழிஞ்சம் துறைமுகத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். துறைமுக திட்டத்தை கைவிடக் கோரி 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பேராயர் மற்றும் 50 ஆயர்கள் உள்பட ஏராளமானவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்க கோரி நேற்று இரவு மீனவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. திருவனந்தபுரம் காவல் நிலையத்தை சூறையாடியதுடன் படகு துடுப்பு மற்றும் இருப்பு கம்பிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் டிஎஸ்பி உள்பட 36 போலீசார் காயமடைந்தனர். போராட்டத்தை தொடர்ந்து ஏற்கனவே கைதான 5 பேரில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். வன்முறையில் தாக்குதலுக்கு உள்ளான 2 போலீசார் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் பொது சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!