ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேர் கைது
2022-11-28@ 10:21:49

அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி பிரிவு போலீசார் அங்கிருந்த ஒரு லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அதனை சோதனையிட்ட போது செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. 2 கார், லாரி மற்றும் அதிலிருந்த 49 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 16 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கைது செய்தவர்களில் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் 9 பேர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் 2 பேர், சேலத்தை சேர்ந்தவர் 1 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரியை விரட்டி சென்ற போது போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி
ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!