சுவாமியே..சரணம் ஐயப்பா!: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் ரூ.52 கோடி வருமானம்..தேவசம் போர்ட் அறிவிப்பு..!!
2022-11-28@ 10:05:50

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் 52 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவில், கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்திருந்த நிலையில், நடப்பாண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சன்னிதானம் செல்லும் 4 பாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் முன்பதிவு திறம்பட செயல்படுத்தப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி சபரிமலை வந்து செல்கின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு இதே நாளில் 9 கோடியே 92 லட்சம் ரூபாயாக இருந்த கோவிலின் வருமானம், நடப்பாண்டு நடை திறந்தபின் இதுவரை 52 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் அரவணை விற்பனைகள் மட்டும் 23 கோடியே 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி
ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!