கூட்டுறவு சங்கத்தில் ரூ.79 லட்சம் மோசடி செய்த செயலாளர் கைது
2022-11-28@ 00:30:13

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேசின்ன குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ஜெகநாதன் (52). இவரும், நிர்வாக குழு உறுப்பினர்களும் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்தது. இது குறித்து துணைப்பதிவாளர், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், வங்கியில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்திருந்த தங்க நாணயங்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் கடன் வாங்கியதும், விவசாயிகள் திரும்ப செலுத்திய கடன் தொகையை வங்கி கணக்கில் சேர்க்காததும், விதிமுறை மீறி வங்கி ஊழியர்களுக்கு கல்விக்கடன் என ரூ. 79 லட்சம் மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தலைவர், செயலாளர் மற்று நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 பேர் இதில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் செயலாளர் ஜெகநாதனை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!