தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மேலும் பல புதிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் தேவை; ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை
2022-11-28@ 00:30:11

விருதுநகர்: தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய, மேலும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுப்பணிகளைத் தொடங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில், திருக்கொடுங்குன்றம் கல்வெட்டுகள், திருத்தங்கல் தொல்லியல் ஆய்வுகள், பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய 3 நூல்கள் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நூல்களை வெளியிட, கலெக்டர் மேகநாதரெட்டி பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘விருதுநகர் மாவட்டம் வரலாற்று பதிவுகளில் தன்னுடைய தடத்தை அழுத்தமாக பதித்த மாவட்டமாகும்.
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மக்கள் வசிக்கும் பகுதியாக, பண்பாட்டு தொடர்ச்சியாக இன்றைக்கும் இம்மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் வரலாற்று செய்திகள் ஏராளமாக உள்ளன. வெம்பக்கோட்டை அகழாய்வு குறித்து புத்தகத் திருவிழாவில் தனி அரங்கம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் மேலும், பல புதிய இடங்களில் தொல்லியல்துறை ஆய்வு நடைபெற வேண்டும். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்படும். குறிப்பாக, பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில், தொல்லியல் ஆய்வு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெறும். இதனால், தமிழகத்தின் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்படும். இந்தியாவின் வரலாற்றை, தென்கோடியிலிருந்து எழுதும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட வேண்டும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!