புதுவையில் ரூ.900 கோடிக்கு விடப்பட்ட குப்பை; அள்ளும் டெண்டரில் ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
2022-11-28@ 00:30:04

புதுச்சேரி: புதுவையில் ரூ.900 கோடிக்கு விடப்பட்ட குப்பை அள்ளும் டெண்டரில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து பகிரங்க நீதிவிசாரணைக்கு முதல்வர் தயாரா? என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் குப்பை அள்ளி தரம்பிரிக்க 19 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்துக்கு ெடண்டர் கோரப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 4ம் தேதி டெண்டர் திறக்கப்படவுள்ளது. ரூ.900 கோடிக்கு விடப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.
இதுசம்பந்தமாக ஆளும் பாஜ அமைச்சர் சாய் சரவணன்குமார் தலைமை செயலருக்கு புகார் அளித்துள்ளார். நான் ஏற்கனவே குப்பை டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாக கூறியிருந்தேன். அதனை துறையின் அமைச்சரே ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ஊழல் என்று சொன்னால் பாஜ உடனடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கும் என்ற சொன்ன பாஜ மாநில தலைவர் சாமிநாதன் என்ன செய்யப்போகிறார். முதல்வர் உத்தரவு இல்லாமல் இந்த டெண்டர் விட்டு இருக்க முடியாது. இதுசம்பந்தமாக பகிரங்க நீதி விசாரணைக்கு முதல்வர் தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
2.28 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியது; டெல்டாவில் மழை சேதம் அமைச்சர்கள் குழு ஆய்வு: முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்: மெய்ப்பொருள் நாயனாரின் மெய்சிலிர்க்கும் பக்தி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
படகு போட்டிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி கோவளம் வந்த படகுகள்: குமரியில் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே தைப்பூச திருவிழா கோலாகலம்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!