பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள் மெகபூபா எச்சரிக்கை
2022-11-28@ 00:29:58

ஸ்ரீ நகர்: ‘ஜம்மு காஷ்மீரில் இனிவரும் தேர்தல்களில் இளைஞர்கள் களமிறங்க வேண்டும். பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
இந்தியா பாஜ.வுக்கு சொந்தமானதல்ல. அதற்கு சொந்தமாகவும் விட மாட்டோம். நாம் இணைந்திருக்கும் இந்தியாவானது ஜவகர்லால் நேரு, காந்திஜி, மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தால் இணைக்கப்பட்டது. இது இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்தியா.
மக்களின் கண்ணியம், அடையாளத்துடன் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது. பாஜ. ஒட்டு மொத்தத்தையும் அழித்து விட்டது. 1947ம் ஆண்டு இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் கொள்ளையர்களை போல் ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது. காஷ்மீர் மக்களால் அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இனிவரும் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டப்பேரவைத் தேர்தல்களில் இளைஞர்கள் களமிறங்க வேண்டும். பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள். இதுவே தங்களது உரிமைகளை பெறுவதற்கான ஆயுதம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி
ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!