வேடசந்தூர் அருகே ஆண், பெண் உடலமைப்புடன் 6 காலுடன் பிறந்த அதிசய கன்று: ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
2022-11-27@ 12:00:01

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ஆண், பெண் உடலமைப்பில், 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றை ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்அருகே நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் கேரளா பெருமாள். இவர் தனது தோட்டத்தில் 3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு பசு மாடு நேற்று கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு இடுப்பு பகுதிக்கு மேலே பசு மாடு போன்றும், இடுப்பு பகுதிக்கு கீழே 6 கால்களுடன் ஆண் கன்று உடல் தனியாகவும், பெண் கன்று உடல் தனியாகவும் இணைந்து இருப்பதை கண்டு, கேரளா பெருமாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கன்று பிறந்த சிறிது நேரத்திலே உயிரிழந்தது.
இதுபற்றி அறிந்ததும் அங்கு ஏராளமான ஊர் மக்கள் கூடி அந்த அதிசய கன்றை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதற்கிடையே தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் அக்கன்றை பரிசோதித்து சென்றனர். ஆண், பெண் உடலைமைப்பில் 6 கால்களுடன் கன்று பிறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!