நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை: வைகை அணை நீர்மட்டம் சரிவு
2022-11-27@ 11:57:46

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம், இந்தாண்டில் இரு முறை முழுக்கொள்ளளவை எட்டியது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததால் அணை நீர்மட்டம் கடந்த 3 மாதங்களாக குறையவே இல்லை.
இதன்காரணமாக வைகை அணையில் இருந்து முதல்போகம், ஒருபோகம், 58ம் கால்வாய் மற்றும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அதிகமான நீர்வரத்தால் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டது. வடகிழக்குப்பருவமழை தொடங்கி ஒருமாதம் ஆகியும் தேனி மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்தது.
இதனால் கடந்த 3 மாதங்களாக முழுகொள்ளளவில் நீடித்து வந்த அணை நீர்மட்டம் வேகமாக சரிந்துள்ளது. அணை நீர்மட்டம் தற்போது 67 அடியாக குறைந்துள்ளதால் உசிலம்பட்டி பகுதி மக்களின் தேவைக்காக 58ம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலைடைந்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 67.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 1,719 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 5,147 மில்லியன் கனஅடியாக இருந்தது.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!